Skip to main content

செங்கோட்டை வன்முறை - குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பலி!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

deep sidhu

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக போரட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கடந்தாண்டு குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி வன்முறையாக மாறியது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனித கொடி எற்றப்பட்டது.

 

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், செங்கோட்டையில் கொடியேற்றியதை பஞ்சாபை சேர்ந்த நடிகர் தீப் சித்து ஃபேஸ்புக் லைவ்வில் ஒப்புக்கொண்டார். ”எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக செங்கோட்டையில் நிஷான் சாஹிப்பை (சீக்கியர்களின் புனிதக் கொடி) ஏற்றினோம். தேசியக்கொடியை அகற்றவில்லை” எனத் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்தில் முக்கிய குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டு தீப் சித்து கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் இருந்து வந்த அவர், தற்போது டெல்லியிலிருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டா செல்லும் வழியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியாகியுள்ளார். அவரது கார், லாரியில் மோதியதில் படுகாயமடைந்த தீப் சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்து வருகின்றனர்.

 

செங்கோட்டையில் சீக்கியர்களின் புனித கொடியேற்றப்பட்டது சர்ச்சையான நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளாண் சங்கங்கள்,  "தீப் சித்து ஒரு சீக்கியர் அல்ல, அவர் பாஜகவின் ஊழியர்” என குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.