Skip to main content

2 முதல் 18 வயதுடையோருக்கு கோவாக்சின் செலுத்த அனுமதி வழங்கப்பட்டு விட்டதா? - மத்திய இணையமைச்சர் பதில்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

covaxin

 

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின், மக்களுக்குப் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவாக்சின் தடுப்பூசி, இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் மீதும் பரிசோதிக்கப்பட்டு வந்தது.

 

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகளுக்கு செலுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரையையடுத்து விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விரைவில் அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "2-18 வயது உடையோருக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மதிப்பீடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சில குழப்பங்கள் உள்ளன என்பதால் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் 2-18 வயதுடையோருக்கு கோவக்சினை அங்கீகரிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.