Skip to main content

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 'அணை பாதுகாப்பு மசோதா'-தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

'Dam Protection Bill' passed in Parliament

 

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

கடந்த 29 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்த பேச்சு வந்தபொழுதே இதை நிறைவேற்றக்கூடாது என்றும், நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கி அணை பாதுகாப்பு மசோதாவைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்நிலையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைத்து அணை பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்யவேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் கிடைத்தது. அதன்பிறகு மசோதா மீதான குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்ததால் மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளதால் விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக உருப்பெறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

கமல் கறார் - லேட்டாகும் ம.நீ.ம, தி.மு.க கூட்டணி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Kamal Strong-Late MNM DMK alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி நீடிப்பதால் திமுக தொகுதிப் பங்கீடு வரை சென்றுள்ளது. ஆனால், அதிமுக தற்போது வரை கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இன்று திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் விரைவில் திமுகவிடம் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'திமுக கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைவது இயற்கையானது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளைக் கேட்பதாகவும், திமுக ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக மக்கள் நீதி மய்யம் தரப்பினர் திமுகவிடம் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வரும் நிலையில், அந்த தாமதத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. திமுக தரப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும், ஆனால், தாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டாலும் டார்ச் லைட் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் கறாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதமே தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சின்னத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கி ஒப்புதல் அளித்திருந்தது. எனவே போட்டியிட்டால் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதிகள் வேண்டும் என பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டு பேச்சுவார்த்தையை முன் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.