இது குறித்த புகாரின் அடிப்படையில், தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம், பிரேம் (எ) பிரபாகரன், வெற்றி (எ) வெற்றிச்செல்வம், சாலமோன், மணி, மற்றொரு வெற்றி ஆகியோர்தான் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மணிரத்தினம், பிரேம், வெற்றிச்செல்வம், சாலமோன் ஆகியோர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.|
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2016-ல் நடைபெற்ற ஒரு தகராறில் ஆறுமுகம் மணிரத்தினத்தை கத்தியால் குத்திவிட்டதாகவும், இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஆறுமுகம் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், இதனால் முந்திக்கொண்டு ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.