Advertisment

தெலங்கானாவில் அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு!

kl

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவற்றை விமானங்கள் மூலமும்ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.

Advertisment

இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தெலங்கானாவில் இன்று (12.05.2021) முதல் அடுத்த 10 நாட்ககளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரை செயல்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

corona virus lockdown telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe