ADVERTISEMENT

இப்படியும் ஒரு கொடூர தண்டனையா... வைரலான வீடியோவால் சிக்கிய பெற்றோர்!

04:36 PM Jun 09, 2022 | kalaimohan

டெல்லியில் ஐந்து வயது சிறுமிக்கு பெற்றோர்கள் கொடுத்த தண்டனை கண்டனத்தைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

அண்மைக்காலமாகப் பெற்றோர்களின் கேள்விகளுக்குக் குழந்தைகள் அதன் மழலை மொழியில் சாமர்த்தியமாகப் பதில் சொல்லும் வீடியோக்களை பார்த்திருப்போம். அதேவேளையில் அதற்கு நேர்மாறாக பெற்றோர்களால் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோக்களையும் பார்த்திருப்போம். அந்த வகையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பலரது கண்டனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

டெல்லியில் சொல்பேச்சு கேட்காத ஐந்து வயது சிறுமியைப் பெற்றோர்கள் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் சூடான வெறும் தரையில் கட்டி தூக்கிப் போட்டுள்ளனர். அந்த சிறுமி வெப்பத்தைத் தாங்க முடியாமல் அலறுகிறார். இந்த காட்சிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் படம் பிடிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்ட நிலையில், வைரலாகி வருகிறது. டெல்லியின் காராவால் நகரிலோ, கஜூரி காஸ் நகரிலோ இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படும் நிலையில், டெல்லி போலீசார் அந்த சிறுமியின் குடும்பத்தைக் கண்டுபிடித்து விசாரித்து வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT