டெல்லியில் ஐந்து வயதுசிறுமிக்குபெற்றோர்கள் கொடுத்த தண்டனைகண்டனத்தைப்பெற்று வருகிறது.
அண்மைக்காலமாகப் பெற்றோர்களின்கேள்விகளுக்குக்குழந்தைகள் அதன் மழலை மொழியில் சாமர்த்தியமாகப் பதில் சொல்லும்வீடியோக்களைபார்த்திருப்போம். அதேவேளையில் அதற்கு நேர்மாறாக பெற்றோர்களால் குழந்தைகள்கொடூரமாகத்தாக்கப்படும்வீடியோக்களையும்பார்த்திருப்போம். அந்த வகையில் சமூகவலைதளங்களில்வெளியானவீடியோஒன்று பலரதுகண்டனத்தைப்பெற்றுள்ளது.
டெல்லியில்சொல்பேச்சுகேட்காதஐந்து வயதுசிறுமியைப்பெற்றோர்கள் கை,கால்களைகட்டி மொட்டை மாடியில் சூடான வெறும் தரையில் கட்டிதூக்கிப்போட்டுள்ளனர். அந்த சிறுமிவெப்பத்தைத்தாங்க முடியாமல் அலறுகிறார். இந்த காட்சிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் படம் பிடிக்கப்பட்டுஷேர்செய்யப்பட்ட நிலையில்,வைரலாகிவருகிறது. டெல்லியின்காராவால்நகரிலோ,கஜூரிகாஸ்நகரிலோ இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படும் நிலையில், டெல்லிபோலீசார்அந்த சிறுமியின் குடும்பத்தைக் கண்டுபிடித்து விசாரித்து வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கபோலீசார்முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)