Skip to main content

கரோனாவால் வீதியுலா இல்லாத திருப்பதி பிரம்மோற்சவம்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

crowd less Tirupati  temple festival  Corona


திருப்பதி திருமலை பெருமாள் கோயில் புரட்டாசி மாத பிரமோற்சவம் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதத்தில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தினமும் பிரமோற்சவத்தைக் காண திருப்பதிக்குச் செல்வார்கள்.


திருப்பதி ஏழுமலையானுக்கு, படைப்பு கடவுளான பிரம்மன் முதல்முதலாக உற்சவத்தை நடத்தியதால் அது பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என இருமுறை விதவிதமான அலங்காரத்தில் நான்கு புற மாடவீதியுலா வருவார். இதனைக் காண கோவிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.


இந்தாண்டு செப்டம்பர் 19ஆம் தேதி காலை, கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. வரும் 27ஆம் தேதியுடன் இந்த நிகழ்வு முடிவு பெறுகிறது. இந்தாண்டு கரோனா பரவலால் மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு காலை மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“கோயிலில் இருக்கேன்” - அரசியல் கேள்வியை தவிர்த்த ஜெயம் ரவி

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jayam ravi omitted vijay political entry question

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இதில் சைரன் படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றி சொன்னார். மேலும் மணிரத்னம் - கமலின் தக் லைஃப் படம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார் பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயம் ரவி, “கோயிலில் இருக்கேன். என் படத்தை பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” எனச் சொல்லிவிட்டு சென்றார்.