இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசிய கிரிமினல்! திருவண்ணாமலை பிரபல ஆஸ்ரமத்தில் மடக்கிய போலீஸ்! 

criminal arrested in thiruvannamalai

கர்நாடகா மாநிலம், பெங்களுரூ மாநகரம், சுங்கத்தடே பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். அதேபகுதியில் வசிக்கும் 24 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவுகளை தந்துள்ளார். அந்த இளம்பெண் காதலிக்க மறுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி என்னை காதலிக்கவில்லையெனில் உன் முகத்தில் ஆசிட் ஊத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். மிரட்டலுக்கு பயப்படாமல் அந்தபெண் காதலிக்க முடியாது என மறுத்துள்ளார். உடனே கையில் வைத்திருந்த ஆசிட்டை அந்த பெண்ணின் முகத்தின் மீது ஊத்திவிட்டு தப்பித்துள்ளார். வலியால் அலறி துடித்த அந்த இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆசிட் ஊத்திய நாகேஷ்சை பிடிக்க 4 தனிப்படைகளை பெங்களுரூ மாநகர காவல்துறை அமைத்தது. அவர்கள் பலவழிகளிலும் தேடத் துவங்கினார்கள். அவனுடைய போட்டோவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநில காவல்துறைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 10 நாள் தேடலுக்கு பின்னர் அவர் திருவண்ணாமலையில் தங்கியிருப்பது தெரியவந்தது.

காவி வேட்டி அணிந்துகொண்டு தினமும் திருவண்ணாமலையில் உள்ள பிரபல ஆசிரமம் ஒன்றிற்கு சென்று தியானம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அவருடைய போட்டோவை பார்த்தவர்கள் இதுகுறித்து போலிசுக்கு தகவல் கூறினர். அதன் அடிப்படையில் பெங்களுரூ மாநகர தனிப்படை போலீஸார் மே 12ஆம் தேதி தியானம் செய்துகொண்டிருந்தவர் நாகேஷ் தான் என்பதை உறுதி செய்துகொண்டு அவரை கைது செய்து பெங்களுரூ அழைத்துச் சென்றனர்.

karnataka thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe