Advertisment

அணியின் ரகசியங்களை கேட்ட மர்ம நபர்; முகமது சிராஜ் பரபரப்பு புகார்!

cricketer mohammed siraj contact unknown person related incident 

Advertisment

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள அந்தப் புகாரில், "கிரிக்கெட்போட்டியின் போது சூதாட்டத்தில் பணத்தை இழந்த அடையாளம் தெரியாத ஒருவர் என்னை தொடர்பு கொண்டு அணியின் உள் ரகசியங்களை சொன்னால் எனக்கு ஒரு பெரிய தொகை தருவதாகக் கூறினார்" எனத்தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முகமது சிராஜின்இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த நபரைஅடையாளம் கண்டுபிடித்து நடத்திய விசாரணையில் முகமது சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர்என தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

cricket IPL
இதையும் படியுங்கள்
Subscribe