Skip to main content

கிரிக்கெட் பிரீமியர் லீக்... சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கடந்தாண்டு நடத்திய டி20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, பெல்லாரி கிரிக்கெட் அணியின் கேப்டன் சி.எம். கவுதம், அப்ரார் காஸியை கைது செய்தது கர்நாடக காவல்துறை. கைது செய்யப்பட்ட சி.எம்.கவுதம் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Cricket Premier League ... International broker arrested



சூதாட்டம் தொடர்பாக பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் விஸ்வநாதன், நிஷாந்த், பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தது காவல்துறை. இந்நிலையில் ஹரியானவை சேர்ந்த சயாம் என்ற சர்வதேச கிரிக்கெட் தரகரை காவல்துறை கைது செய்தது. மேலும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி - கவலையில் ஐபிஎல் ரசிகர்கள்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Halted match-IPL fans worried

 

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழை காரணமாக முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பாதியில் மழை பொழிந்ததால் போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது.

 

பின்னர் 215 ரன்கள் இலக்காக வைத்து களத்தில் இறங்கிய சென்னை அணி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பொழிந்தது. இதனால் தற்பொழுது போட்டியானது மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றே ஐபிஎல் இறுதிப்போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில், தற்போது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது மேலும் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

 

 

Next Story

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டில் 18 ஆண்டுகள் வேலை செய்த பலே கில்லாடி கைது

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 

Bale Gilladi, who worked abroad for 18 years with a fake passport, was arrested!



போலி கடவுச்சீட்டு மூலமாக சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வேலை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர், வடக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது 43). இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருவதாகவும் அதற்கான கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக கடவுச்சீட்டு வழங்கல் அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய தணிக்கை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், வீரகனூர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். 

 

அதன் பேரில் வீரகனூர் எஸ்.ஐ. தினேஷ்குமார் வீரமுத்துவின் வீட்டிற்குச் சென்று தணிக்கை செய்துள்ளார். அப்போது வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை என்பதும் அவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. வீரமுத்துவின் பெயரில் அவருடைய உறவினரான உள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் போலியாகக் கடவுச்சீட்டு எடுத்து சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. 

 

ஆள்மாறாட்டம் செய்து போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் எஸ்.ஐ. தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் போலி கடவுச்சீட்டு, போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார். 

 

ராஜேஷ் எப்போது தமிழகம் திரும்பினாலும் அவரைக் கைது செய்ய காத்திருந்த காவல்துறையினர் சென்னை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் தேடுதல் அறிவிக்கை (லுக் அவுட்) வழங்கி இருந்தனர். காவல்துறையினர் வலை விரித்துக் காத்திருப்பதை அறியாத ராஜேஷ், நவ. 13 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் காவலர்கள் குழு திருச்சி சென்று ராஜேஷை கைது செய்தனர். அவரை சேலம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

கடந்த 2002 ஆம் ஆண்டு, வடக்கு ராமநாதபுரத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த உறவினரான வீரமுத்துவின் ரேஷன் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை திருடிய ராஜேஷ் அதன்மூலமாக போலி கடவுச்சீட்டு பெற்றுள்ளார். அப்போது ராஜேஷுக்கு 18 வயது நிறைவடையாததால் வீரமுத்துவின் பெயரிலேயே போலியாக கடவுச்சீட்டு பெற்று சிங்கப்பூருக்கு பறந்துள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அவருடைய கடவுச்சீட்டின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டது. அதைப் புதுப்பிக்க முயன்ற போதுதான் காவல்துறையில் வசமாக சிக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான ராஜேஷை சேலம் மாவட்ட 6-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரின் உத்தரவின்பேரில் ராஜேஷை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.