குறுகலான தெருவில் நடந்து சென்ற பெண்ணை மாடு ஒன்றும் முட்டி தூக்கி வீசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் அயார்ன் நகரில் குறுகலான சாலை பகுதி ஒன்றில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாடு ஒன்று அவரை திடீரென முட்டி தூக்கி வீசியது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வந்த நிலையில் மாட்டின் பிடியிலிருந்து பெண்ணை காப்பாற்ற முயன்றனர். அப்போது சிறிதுநேரம் அமைதியாக இருந்த மாடு திடீரென தடுக்க முயன்றவர்களையும் முட்டி தூக்கி வீசியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.