Skip to main content

கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை குறைத்தது சீரம்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021
covishield

 

 

இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மே ஒன்று முதல்  மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் கரோனா தடுப்பூசியை, அதனை தாயரிக்கும் நிறுவனங்களிடம் இருந்தே வாங்கிக்கொள்ளலாம் என அனுமதியளித்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம், மாநிலங்களுக்கு தடுப்பூசி 400 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

 

ஆனால் தடுப்பூசியின் விலை அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்கவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தின. மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் விலையை குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் சீரம் நிறுவனம், மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலையில் 100 ரூபாயை குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு 300 ரூபாய்க்கு தடுப்பூசி  விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.