
இங்கிலாந்தில் பரவி வந்தமரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத்தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் இங்கும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 58பேருக்குப் புதியவகை கரோனாதொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 13 பேருக்குப் புதியவகை கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்,இந்தியாவில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி அறையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுடன் தொடர்பில்இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)