Skip to main content

2 முதல் 6 வயதினர் மீது விரைவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி சோதனை!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

corona vaccine

 

உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கெதிராக, பல்வேறு தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் பல்வேறு நாடுகள் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கிவிட்டன. அதேநேரத்தில் இந்தியாவில், 18 வயதுக்கு குறைந்தவர்கள் மீது கரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

 

ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும், 6  முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் டெல்லி எய்ம்ஸில் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு டோஸ் மட்டும் ஏற்கனவே செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வந்ததாகவும், அடுத்தவாரம் முதல் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தபட்டு சோதனை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதுவரை இந்தியாவில், ஸைடஸ் காடிலா நிறுவனம் மட்டுமே ஏற்கனவே தனது தடுப்பூசியை 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மீது பரிசோதித்து தரவுகளை சமர்ப்பித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அனுமதியளிப்பது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் பரிசீலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.