ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 28 ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல தடை இல்லை என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி பிப்ரவரி 20 முதல் 28 ஆம் தேதி வரை அவர் வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 5,6,7, மற்றும் 12 ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரம் ஆஜராக உத்தரவு...
Advertisment