Advertisment

சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை!

ரக

ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த சூழலில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இதனையடுத்து 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகியது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரை கட்சியில் இருந்தும், துணை முதல்வர் பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது.

Advertisment

மேலும் தான் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்று அவரே தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மற்றும்அவரின் ஆதரவாளர்களை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வரும் 21ம் தேதி வரை சச்சின் பைலட் உள்ளிட்ட மற்றும் அவர்ஆதரவாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

sachinpilot
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe