ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடக்கிறது. 3,295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

rajasthan

இந்நிலையில் பிகானூர் மாவட்டத்திலுள்ள கிழக்கு பிகானூர் தொகுதியில் கணவரை எதிர்த்து மனைவி போட்டியிடுகிறார். ஸ்வரூப் சந்த் கெலாட், 57, என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார் இவரை எதிர்த்து ஸ்வரூப்பின் மனைவி மஞ்சுலா கெலாட் என்பவரும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இருவருமே ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் பிகானூர் மாவட்டம் கிழக்கு பிகானூர் தொகுதியில் ஸ்வரூப் சந்த் கெலாட், 57, என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அவரது மனைவி மஞ்சுலதா கெலாட்,52 என்பவரும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருமே ஒன்றாக வாழ்ந்து வரும் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த தம்பதியினர் அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணம் ஆகி 35 வருடங்கள் ஆகிறது. மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது நடக்க உள்ள தேர்தலில் யாராவது ஒருவர் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அந்த தம்பதியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.