Skip to main content

ஷாருக்கான் மகனுக்காக காஸ்ட்லி வழக்கறிஞர்... ஒருமுறை ஆஜராக 20 லட்சம் பீஸாம்?

Published on 07/10/2021 | Edited on 12/10/2021

 

Costly lawyer defending Shah Rukh Khan's son

 

கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெற்றதாகத் தகவல் கசிய, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 அன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அக்.7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இவ்வழக்கில் ஆரியன்கானிடம் நடத்திய விசாரணையில், கடந்த நான்கு வருடங்களாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக அவர் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கப்பலிலிருந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்றதாகக் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் நாயர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரியன்கான் ஸ்ரேயாஸ் நாயர் மற்றும் அவருடன் கைதான மற்றொரு நபர் என மூவரும் அடிக்கடி பார்ட்டி கொண்டாடியிருப்பது அவர்களின் செல்ஃபோன் வாட்ஸ் அப் உரையாடலில் தெரியவந்துள்ளது எனப் போதை ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Costly lawyer defending Shah Rukh Khan's son

 

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தரப்பில் அவரது மகனை மீட்க அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனே ஸ்பெயினில் படப்பிடிப்பிலிருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார். மகன் ஆர்யன்கானுக்காக இந்தியாவிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் சதீஸ் மான்ஷிண்டேவை நாடியுள்ளது ஷாருக்கான் தரப்பு. இவர் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பாராம். இதில் மிகவும் குறிப்படைத்தகுந்தது சதீஸ் மான்ஷிண்டே, பல பாலிவுட் பிரபலங்களின் வழக்குகளில் வாதாடி ஜாமீன் வாங்கி கொடுத்தவர்.

 

Costly lawyer defending Shah Rukh Khan's son

 

1983 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற துவங்கிய மான்ஷிண்டே, இந்தியாவில் பல பிரபலங்களுக்கு வாதாடிய ராம்ஜெத் மலானியிடம் 10 வருடங்கள் ஜூனியராக பணியாற்றியவர். பாலிவுட் பிரபலங்களுக்காக இவர் பல வழக்குகளில் வாதாடியுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் சஞ்சய் தத்திற்காக 1993 ஆம் ஆண்டு வாதாடி ஜாமீன் பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல் 2007 ஆம் ஆண்டு சட்டவிரோத ஆயுதப் பதுக்கல் வழக்கில் மீண்டும் சஞ்சய் தத்துக்கு வாதாடிய  குழுவில் மான்ஷிண்டே இருந்தார்.

 

Costly lawyer defending Shah Rukh Khan's son

 

1998-ல் மான் வேட்டை வழக்கு, 2002-ல் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கு என நடிகர் சல்மான்கானுக்காக வாதாடியுள்ளார். அண்மையில் தற்கொலை செய்துகொண்ட தோனி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கில் நடிகை ரியா சக்கவர்த்திற்கு சார்பாக ஆஜராகி வாதாடிவருகிறார். இப்படி பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு வாதாடி வரும் சதீஸ் மான்ஷிண்டே இந்த வழக்கிலும் ஷாருக்கான் மகனுக்காக ஆஜராகி வாதாட உள்ளார் காஸ்ட்லி வழக்கறிஞர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.