சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 4 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ள நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் தற்போது இளைஞர் ஒருவருக்கு கரோனா அறிகுறி தெரியவந்துள்ளது. அவர் அம்மாநிலத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ADVERTISEMENT
இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 4 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ள நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் தற்போது இளைஞர் ஒருவருக்கு கரோனா அறிகுறி தெரியவந்துள்ளது. அவர் அம்மாநிலத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments