ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு 147 ஆக உயர்வு!

10:17 AM Mar 18, 2020 | santhoshb@nakk…

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. அதில் 122 பேர் இந்தியர்கள் என்றும், 25 பேர் வெளிநாட்டினர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா உறுதி செய்யப்பட்டோரின் 147 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

மாநிலங்கள் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன் படி மகாராஷ்டிரா- 41, கர்நாடகா- 11 , மேற்கு வங்கம்- 1, ஒடிஷா- 1, தமிழ்நாடு- 1, உத்தரப்பிரதேசம்- 16, ஹரியானா- 16, உத்தரகாண்ட்- 1, கேரளா- 27, ஜம்மு & காஷ்மீர்- 9, தெலங்கானா- 5, பஞ்சாப்- 1, ராஜஸ்தான்- 4.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT