Skip to main content

'1,34,33,742 மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

coronavirus samples tested upto july 17th icmr

 

நாடு முழுவதும் நேற்று வரை (17/07/2020) மொத்தம் 1,34,33,742 கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (16/07/2020) மட்டும் 3,61,024 மாதிரிகள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (17/07/2020) வரை மொத்தம் 18,31,304 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று (17/07/2020) மட்டும் தமிழகத்தில் 48,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

 

மேலும் தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நாள்தோறும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்