உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்பட உலக நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi555.jpg)
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இரண்டாவது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாகச் சாலைகளில் அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். டெல்லியில் மருத்துவப் பணியாளர்கள், ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி எனச் சாலையில் போர்டு வைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi888.jpg)
தமிழகத்தில் முதல் நாளைக் காட்டிலும் 2- வது நாள் ஊரடங்கில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து கண்டப்படுகிறது. தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் எனக் காவல்துறை எச்சரித்ததால் ஆள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுகிறது.
Follow Us