கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/moh23.jpg)
இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,789-லிருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124-லிருந்து 149 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353-லிருந்து 402 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,018, தமிழ்நாடு 690, டெல்லி 576, தெலங்கானா 364, கேரளா 336, ராஜஸ்தான் 328, ஆந்திரப்பிரதேசம் 305, மத்தியப்பிரதேசம் 229 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)