ADVERTISEMENT

மலேசியாவில் தவித்த 150 மாணவர்கள் இந்தியா வந்தனர்!

07:19 PM Mar 18, 2020 | Anonymous (not verified)

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் விமான சேவைகளை முடக்கி வைத்துள்ளன. அதே சமயத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் தங்கள் நாட்டவரை மீட்கும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மலேசியா கோலாலம்பூரில் சிக்கித்தவித்த 150 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு ஏர் ஏசியா விமானம் மூலம் விசாகபட்டினம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT