ADVERTISEMENT

கரோனா எதிரொலி... நாட்டு மக்களிடையே நாளை உரையாற்றுகிறார் மோடி...!

11:10 PM Mar 18, 2020 | Anonymous (not verified)

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு இன்று கூடியது. கூட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை இரவு 8 மணிக்கு கரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் மோடி பேச உள்ளதாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT