Advertisment

இந்தியாவில் ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை...

கதச

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி சோதனை பரிசீலனையிலிருந்து வருகின்றது. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி தற்போது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

Harsh vardhan corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe