ADVERTISEMENT

ஒரே நாளில் 3,214 கரோனா தொற்று!!! 248 பேர் பலி!! சுழன்றடிக்கும் கரோனா..

10:03 PM Jun 23, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று மட்டும் மராட்டியத்தில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,214 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 248 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT