ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு; 175 பேர் பலி!

12:20 PM May 29, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT


இந்தியாவில் அதன் தாக்கம் என்பது கடந்த சில வாரங்களாக அதிக அளவில் இருந்து வருகின்றது. மராட்டியம், தமிழகம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று விதிகம் என்பது தினந்தோறும் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கின்றது. இதுவரை இந்தியாவில் 1,65,799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் அவர்களில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,466 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் 175 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT