ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 90,802 பேருக்கு கரோனா!

10:24 AM Sep 07, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தற்போது கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்து வருகின்றது. இந்தியா முழுவதும் தினமும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகபட்ச அளவாக இந்தியாவில் ஒரே நாளில் 90,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT