Skip to main content

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விதிகம் அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

d

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 

 

இந்தியாவில் குறிப்பாக மராட்டியத்தில் கரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகின்றது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகின்றது.  இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதுவரை இந்தியாவில் 4,26,910 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,703 பேர் இதுவரை இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.77% ஆக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்