Skip to main content

புதிய வேகம் எடுக்கும் கரோனா!! இந்தியாவில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேர் பாதிப்பு!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
nm

 

 

உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புக்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 57,118 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,95,988 ஆக அதிகரித்துள்ளது. 746 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்