Advertisment

இந்தியா வந்த 7 பேருக்கு உருமாறிய கரோனா!

த

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் உருமாறிய வைரஸ் பரவியது. தமிழகத்தில் கூட ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த பல நாட்களாக இந்தியாவில் யாருக்கும் உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கும், பிரேசிலில் இருந்த வந்த ஒருவருக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 187 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe