Skip to main content

கரோனாவுடன் தொடர்புடைய கருப்பு பூஞ்சை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? அறிகுறிகள் என்னென்ன? - நிபுணர்கள் விளக்கம்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

aiims director

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்க்ளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது. இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  மேலும் கருப்பு பூஞ்சை நோயை கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

இந்தநிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்காமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்றும் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

 

கருப்பு பூஞ்சை வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, "கரோனா நோயாளிகளுக்கு  பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இது சார்ஸ் வைரஸ் பரவியபோதும் ஒரளவிற்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டது. கரோனாவுடன் உடன் கட்டுப்பாடற்ற நீரிழிவு மியூகோமிகோசிஸின் (கருப்பு பூஞ்சையின்) அதிகரிப்புக்கு வழிவகுக்கும். கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. இரத்ததில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டெராய்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும், மேலும் ஸ்டெராய்டுகளை எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார். 

 

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டால், என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது குறித்து பேசியுள்ள மேடந்தா மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் நரேஷ் ட்ரேஹான், "கரோனாவுடன் தொடர்புடைய கருப்பு பூஞ்சையின் முதற்கட்ட அறிகுறிகள், மூக்கில் வலி / மூச்சுத்திணறல், கன்னத்தில் வீக்கம், வாய்க்குள் பூஞ்சை படர்தல், கண் இமைகளில் வீக்கம் போன்றவை. இதற்கு விரைவான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏன் வெளிநடப்பு? - சு. வெங்கடேசன் எம்.பி. விளக்கம்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Why opposition party mp's went out Su.Venkatesan answered in tweet

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இன்று (10 ஆம் தேதி) பிரதமர் மோடி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசவிருக்கிறார். 

 

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசுகையில், “மதுரையில் ரூ. 1,977 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,627 கோடி ரூபாய்க்கான கடன் ஜெய்காவில் இருந்து எடுத்து மத்திய அரசின் செலவில் கட்டப்படுகிறது. மத்திய அரசு இந்தக் கடனைத் தீர்த்து வைக்கும். இதன் மூலம் தமிழக அரசுக்கு எந்தக் கடனும் இல்லை. மற்ற இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 740 படுக்கைகள் தான் இருக்கும், ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைகள் இருக்கும். கூடுதலாக இருக்கும் 150 படுக்கைகளும் தொற்று நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு பிரிவாக செயல்படும்” எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது திமுக உறுப்பினர்கள் வெட்கம் வெட்கம் என முழக்கம் எழுப்பினர்.

 

Why opposition party mp's went out Su.Venkatesan answered in tweet

 

ஒரு கட்டத்திற்கு மேல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. கேட்டுவிட்டு போங்கள்” என்றார். தற்போது இந்த காணொளி பரவி வருகிறது. 

 

Why opposition party mp's went out Su.Venkatesan answered in tweet

 

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநடப்பு குறித்து பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “மதுரை எய்ம்ஸ் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜெய்காவிடம் கடன் வாங்கிக் கட்டுகிறோம்”. என்றார் நிதியமைச்சர். “எப்போ? எப்போ?” என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை. கட்டடமும் கட்டப்படவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

“95 சதவீதமா... இருந்த பெயர் பலகையை கூட காணவில்லை” - எம்.பி சு.வெங்கடேசன்

 

 

Next Story

அமைச்சர் செந்தில் பாலாஜி: எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைப்பு

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Minister Senthil Balaji; AIIMS Medical Group

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இடைக்கால ஜாமீன் மனுவும், அமலாக்கத்துறை சார்பில் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இதில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது. மேற்குறிப்பிட்டுள்ள மற்ற இரு மனுக்கள் மீதும் நேற்று விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையையே பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவும் அனுமதி அளித்தது.

 

மேலும், இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விரும்பினால் அவர்கள் முடிவு செய்யும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்கலாம். அவரது உடல்நிலையை, சிகிச்சையை ஆராயலாம் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கண்காணிக்க, இருதய சிகிச்சை நிபுணர்களுடன் கூடிய 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.