Skip to main content

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் கேரள அரசு!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலிருப்பது கேரளா. அரபு நாடுகள், இத்தாலி, ஸ்பெயின், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியிலிருப்பவர்கள் மலையாளிகள். இதில் கரோனா தொற்று 173 உலக நாடுகளைப் பாதிக்கச் செய்து மக்களை அச்சத்திலும், நடுக்கத்திலும் வைத்திருக்கிறது.
 

வெளிநாடுவாழ் மலையாளிகள் தாயகம் திரும்பி வருகிற சமயம் சோதனையிட்டதில் பலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கேரளாவில் கரோனா பரவியதில் 27 பேர் கரோனா தொற்று சிகிச்சையிலும் சுமார் எட்டாயிரம் பேர் கண்காணிப்பிலும் உள்ளனர்.

CORONA PREVENTION KERALA GOVERNMENT

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது கேரளா. முதல்வர் பினராய் விஜயனும், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவும் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பிளான் A, பிளான் B, பிளான் C என மூன்று கட்டத் திட்டத்தின் அடிப்படையில் கரோனா தொற்று உள்ளவர்களை அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் தனிமைப்படுத்தும் வார்டுகளை அமைத்துள்ளனர்.

CORONA PREVENTION KERALA GOVERNMENT

பிளான் பி படி, தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் மருத்துவமனைகளிலும், பிளான் சி படி, த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் உள்ளிட்ட நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்கள் என மூன்று பிரிவுகளிலும் கரோனா தொற்று தனிமைப்படுத்தும் (ஐ சோலேஷன்) வார்டுகள் அனைத்து மருத்துவ உபகரணங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று அதிகமானவர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை உடனடி சிகிச்சைக்கு உட்படுத்த இந்த முன்னேற்பாடுகளாம்.

CORONA PREVENTION KERALA GOVERNMENT

அடுத்து, 'BREAK THE CHAIN எனும் தொடர்பைத் துண்டியுங்கள் என்ற பேனரோடு கேரளா முழுவதிலும் பொது மக்கள் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைக் கடைகள், மெயின் சாலைகள் என முக்கியமான பொது இடங்களில் சோப்புடன் கூடிய வாஷ்பேசின், அமைத்து மக்கள் கைகழுவும் வகையில், தடையின்றித் தண்ணீர் வசதியையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

CORONA PREVENTION KERALA GOVERNMENT

இது போன்ற வசதிகளை அரசை எதிர்பாராமல், சி.பி.எம்.மின் உறுப்புகளான டி.ஒய்.எப், மற்றும் எஸ்.எப்.ஐ.பிரிவும் இணைந்தே தங்கள் சொந்த செலவில் கேரளா முழுவதிலும் சுமார் ஒரு லட்சம் பிரேக் தி செயின், வாஷ்பேசினை அமைத்திருக்கின்றனர்.
 

கொள்ளை நோய் கரோனாவை முறியடிப்பில் தேசத்திற்கு முன்னுதாரணமாகச் செயல்படுகிறது கேரளா.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.

Next Story

கேரளாவில் பொருளாதார நெருக்கடி? - உயர்நீதிமன்றம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 High Court questioned Economic crisis in Kerala?

 

கேரளா மாநிலத்தில், கேரளா அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிதி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் இன்னும் திரும்ப வரவில்லை. இதனால், எங்களுடைய நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. 

 

இது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால், போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. 

 

இந்த பதில் மனுவை நேற்று (01-11-23) பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றம், ‘கேரள அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத்தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலைமை மோசமாக இருந்தால், கேரளாவின் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை வரும். அதற்கான உரிமை உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு. அரசு உத்தரவாதத்தை நம்பித் தான் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கேரளாவில் இந்த நிலை நீடித்தால் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, அரசு வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது.