Advertisment

மும்பை தாராவியில் வேகம் குறையும் கரோனா!

j

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

Advertisment

இந்தியாவில் குறிப்பாக மராட்டியத்தில் கரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. அங்குள்ள தாராவி பகுதி கரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வந்தது. சுமார் 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியில் 8 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அந்தப் பகுதியில் முதல் கரோனா பாதிப்பு தொடங்கியநிலையில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வந்துள்ளது. தற்போது பாதிப்புகள் சற்று குறைய தொடங்கி உள்ளது. இதுவரை 2,170 பேருக்கு அங்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 80 பேர் இந்தத்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 19 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe