Advertisment

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா தொற்று!

jkl

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. இன்று (17-09-2020) கூடியநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 17 எம்.பி.க்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில் பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது.

Advertisment

coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe