Skip to main content

இந்தியாவில் ஒரே நாளில் 32,937 பேருக்கு கரோனா தொற்று உறுதி; 417 பேர் பலி!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

ர

 

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது.

 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,937 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 417 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 35,909 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 3.22 கோடி பேர் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 3.14 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3.81 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நோய்த் தொற்று காரணமாக இதுவரை 4.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்