Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

,.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. கேரளாவில் மட்டும் தினசரி பாதிப்பு சற்று அதிகமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 221 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

Advertisment

நோய்த் தொற்றிலிருந்து நேற்று (04.11.2021) ஒரேநாளில் 12,165 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 3.37 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 1,48,922 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போதுவரை 107.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 5. 65,728 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

covid 19
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe