Skip to main content

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா; தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

Published on 03/09/2020 | Edited on 04/09/2020

 

 Corona increasing in Pondicherry; Condemning the failure to take preventive measures, AIADMK MLAs Dharna!

 

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று மற்றும் மரணத்தை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இன்று (03.09.2020) சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புதுச்சேரியில் தி.மு.க துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் கரோனா நோய்த் தொற்றும், அதனால் ஏற்படும் மரணமும் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றின் கட்டுக்கடங்காத நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழுவை புதுச்சேரிக்கு அனுப்பியது. அக்குழுவின் பரிந்துரைப்படி புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை செயல்பாடு இல்லை. மாநிலம் முழுவதும் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, சிகிச்சையை மேம்படுத்த வேண்டும் என்ற நிபுணர் குழுவின் ஆலோசனை ஏற்கப்படவில்லை.

 

 Corona increasing in Pondicherry; Condemning the failure to take preventive measures, AIADMK MLAs Dharna!


கடந்த வாரத்தில் தினந்தோறும் சுமார் 1,800 நபர்களுக்கு பரிசோதனை செய்து வந்த நிலையில், தினந்தோறும் குறைந்தது 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் பரிசோதனை எண்ணிக்கை இன்று ஆயிரத்து 800 -இல் இருந்து ஆயிரத்து 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றுடன் நேரிடையாக மருத்துவமனைக்குச் செல்பவர்கள் ஏதாவது கூறி பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. கடந்த வாரம் பரிசோதனை கிட்டுகளும், பரிசோதனை முடிவுகளை அறியும் கருவிகளையும் அதிகம் வாங்கியிருப்பதாக முதல்வர் கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை என்றால் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே இயங்கிய நடமாடும் பரிசோதனை கூடத்தையும் நிறுத்தியது ஏன்?


நோய்த் தொற்று எண்ணிக்கை தினசரி 600 அளவில் வந்தவுடன் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டது யார்? பரிசோதனை எண்ணிக்கை குறைப்பதால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை அரசு ஏன் உணரவில்லை. பரிசோதனை செய்யவும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட ஆளாய் அலைவது அரசுக்கு தெரியுமா? ஒருபுறம் முதல்வர் படுக்கைவசதியும், பரிசோதனை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படும் எண்கிறார். ஆனால் மறுபுறம் நடப்பதோ நேர்மாறாக உள்ளது.


புதுச்சேரி முழுவதும் ஜிப்மரில் சுமார் 350, அரசு மருத்துவக் கல்லூரியான இந்திராகாந்தி மருத்துவமனையில் 450, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 640, பல் மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 1,500 படுக்கை வசதிகளே உள்ள நிலையில் புதுச்சேரியில் 2,366 நோயாளிகள், உள்ளிருப்பு நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற பொய்யான கணக்கை கூற வேண்டிய அவசியம் என்ன?

 

Nakkheeran


படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் அதிகப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள நிலையில் அவைகளை அரசு ஏன் கையகப்படுத்தவில்லை? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

 

கரோனா பாசிட்டிவ் உள்ளவர்களை வீட்டில் தனிமைப் படுத்துவதால் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. அதைத் தடுக்க அரசிடம் போதிய கட்டிட வசதிகள் இருந்தும், அங்கு நோயாளிகளை தனிமைப்படுத்த அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கணக்கை சரிசெய்ய, பரிசோதனை எண்ணிக்கையை குறைத்து மக்களின் உயிரோடு சுகாதாரத்துறை துணையோடு ஆளும் அரசு விளையாடிக் கொண்டு வருகிறது.


சாதாரண நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்டிஜென்ட் டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை? இந்த டெஸ்ட் எடுத்து அதில் பாசிட்டிவ் வந்தவர்களுக்கு ஆர்.டி - பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்க அரசு முன்வர வேண்டும். இவைகள் எதையும் செய்யாமல் சுகாதாரத்துறை நிர்வாகம் மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த இறப்பு விகிதம் இன்று 1.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி 10 -க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். அதற்குரிய வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்தாதே இந்த மரணங்களுக்கு காரணம். ஏனத்தில் வென்டிலேட்டர் வசதி 12 இருந்தும் அங்கு உரிய மருத்துவர்கள், மயக்க மருந்து மருத்துவர்கள் இல்லை. புதுச்சேரியில் பல வென்டிலேட்டர் கருவிகள் சரியாகச் செயல்படவில்லை. இந்திய அளவில் சின்னஞ்சிறு மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரியில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக அரசும், துணைநிலை ஆளுநரும் தங்களது அரசியல் விளையாட்டு, வார்த்தை ஜால அறிக்கைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

 

Ad


இதுதொடர்பாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொய்யான தகவல்களை தினமும் கூறிவருகின்றனர். எனவே கரோனா தொற்றை தடுத்து, மரணத்தைக் குறைக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க தர்ணா போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.