Skip to main content

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா; தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

Published on 03/09/2020 | Edited on 04/09/2020

 

 Corona increasing in Pondicherry; Condemning the failure to take preventive measures, AIADMK MLAs Dharna!

 

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று மற்றும் மரணத்தை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இன்று (03.09.2020) சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புதுச்சேரியில் தி.மு.க துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் கரோனா நோய்த் தொற்றும், அதனால் ஏற்படும் மரணமும் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றின் கட்டுக்கடங்காத நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழுவை புதுச்சேரிக்கு அனுப்பியது. அக்குழுவின் பரிந்துரைப்படி புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை செயல்பாடு இல்லை. மாநிலம் முழுவதும் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, சிகிச்சையை மேம்படுத்த வேண்டும் என்ற நிபுணர் குழுவின் ஆலோசனை ஏற்கப்படவில்லை.

 

 Corona increasing in Pondicherry; Condemning the failure to take preventive measures, AIADMK MLAs Dharna!


கடந்த வாரத்தில் தினந்தோறும் சுமார் 1,800 நபர்களுக்கு பரிசோதனை செய்து வந்த நிலையில், தினந்தோறும் குறைந்தது 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் பரிசோதனை எண்ணிக்கை இன்று ஆயிரத்து 800 -இல் இருந்து ஆயிரத்து 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றுடன் நேரிடையாக மருத்துவமனைக்குச் செல்பவர்கள் ஏதாவது கூறி பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. கடந்த வாரம் பரிசோதனை கிட்டுகளும், பரிசோதனை முடிவுகளை அறியும் கருவிகளையும் அதிகம் வாங்கியிருப்பதாக முதல்வர் கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை என்றால் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே இயங்கிய நடமாடும் பரிசோதனை கூடத்தையும் நிறுத்தியது ஏன்?


நோய்த் தொற்று எண்ணிக்கை தினசரி 600 அளவில் வந்தவுடன் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டது யார்? பரிசோதனை எண்ணிக்கை குறைப்பதால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை அரசு ஏன் உணரவில்லை. பரிசோதனை செய்யவும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட ஆளாய் அலைவது அரசுக்கு தெரியுமா? ஒருபுறம் முதல்வர் படுக்கைவசதியும், பரிசோதனை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படும் எண்கிறார். ஆனால் மறுபுறம் நடப்பதோ நேர்மாறாக உள்ளது.


புதுச்சேரி முழுவதும் ஜிப்மரில் சுமார் 350, அரசு மருத்துவக் கல்லூரியான இந்திராகாந்தி மருத்துவமனையில் 450, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 640, பல் மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 1,500 படுக்கை வசதிகளே உள்ள நிலையில் புதுச்சேரியில் 2,366 நோயாளிகள், உள்ளிருப்பு நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற பொய்யான கணக்கை கூற வேண்டிய அவசியம் என்ன?

 

Nakkheeran


படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் அதிகப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள நிலையில் அவைகளை அரசு ஏன் கையகப்படுத்தவில்லை? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

 

கரோனா பாசிட்டிவ் உள்ளவர்களை வீட்டில் தனிமைப் படுத்துவதால் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. அதைத் தடுக்க அரசிடம் போதிய கட்டிட வசதிகள் இருந்தும், அங்கு நோயாளிகளை தனிமைப்படுத்த அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கணக்கை சரிசெய்ய, பரிசோதனை எண்ணிக்கையை குறைத்து மக்களின் உயிரோடு சுகாதாரத்துறை துணையோடு ஆளும் அரசு விளையாடிக் கொண்டு வருகிறது.


சாதாரண நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்டிஜென்ட் டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை? இந்த டெஸ்ட் எடுத்து அதில் பாசிட்டிவ் வந்தவர்களுக்கு ஆர்.டி - பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்க அரசு முன்வர வேண்டும். இவைகள் எதையும் செய்யாமல் சுகாதாரத்துறை நிர்வாகம் மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த இறப்பு விகிதம் இன்று 1.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி 10 -க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். அதற்குரிய வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்தாதே இந்த மரணங்களுக்கு காரணம். ஏனத்தில் வென்டிலேட்டர் வசதி 12 இருந்தும் அங்கு உரிய மருத்துவர்கள், மயக்க மருந்து மருத்துவர்கள் இல்லை. புதுச்சேரியில் பல வென்டிலேட்டர் கருவிகள் சரியாகச் செயல்படவில்லை. இந்திய அளவில் சின்னஞ்சிறு மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரியில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக அரசும், துணைநிலை ஆளுநரும் தங்களது அரசியல் விளையாட்டு, வார்த்தை ஜால அறிக்கைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

 

Ad


இதுதொடர்பாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொய்யான தகவல்களை தினமும் கூறிவருகின்றனர். எனவே கரோனா தொற்றை தடுத்து, மரணத்தைக் குறைக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க தர்ணா போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.