இந்தியாவில் கரோனாதொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல அரசு அலுவலகங்களிலும் கரோனா பரவுவதோடு, பாதிக்கப்படும் அலுவலங்களும் மூடப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில்,தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்குக் கரோனா தொற்றுஇல்லை எனஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கூட கரோனா தொற்று கண்டறியப்பட்டு ஆளுநர் மாளிகை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.