நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனாவைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,களப்பணியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கும்கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கும்கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும்அவரது குடும்பத்தினருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.