ADVERTISEMENT

நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு...?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!?

06:33 PM Apr 22, 2020 | kalaimohan

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஏற்கனவே மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி பிரதமர், மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏற்கனவே இந்தியாவில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்தான் தற்போது நடக்கவுள்ளது என தகவல் வந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT