நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு...?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!?

கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஏற்கனவே மேமூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதிபிரதமர், மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனைமேற்கொள்ளஇருக்கிறார். இந்த ஆலோசனையில் ஊரடங்கைநீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

curfew

ஏற்கனவே இந்தியாவில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன்பிறகுஅந்த உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மே3 ஆம் தேதிக்கு பிறகும்நீட்டிக்கப்படுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்தான் தற்போதுநடக்கவுள்ளது எனதகவல் வந்துள்ளது.

corona virus curfew modi
இதையும் படியுங்கள்
Subscribe