நாடு முழுவதும் கரோனாதடுப்பு நடவடிக்கைகாரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்குஅறிவிக்கப்பட்டு, தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம்நாடு முழுவதும் அமலில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்பொழுது வரை கரோனாசமூகபரவல்நிலையை அடையவில்லை எனஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. மேலும்,இந்தியாவில்பொதுமுடக்கம்காரணமாக கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமுடக்கம்இல்லாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும். குணமடைந்தோர் விகிதம் 49.2 சதவீதமாக உள்ளது.இந்தியாவில்பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குணமடைந்தோர்எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.