Corona certificate mandatory for travelers coming  India from 6 countries including China

சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ்லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள்உள்ளிட்டவைமூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் அதன் புதிய அலையைத்தொடங்கியுள்ளது. இதனால்சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ்கட்டாயம் என மத்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேலும், இந்த ஆறு நாடுகளில் இருந்து இந்தியாவரும் பயணிகள் தங்களதுபயணத்தைத்தொடங்குவதற்கு72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்றவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.