நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர்அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.கரோனாஉறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில்தன்னை சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.