ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு...

10:56 AM Mar 17, 2020 | kirubahar@nakk…

இந்தியாவில் கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 125 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்து, கேரளா- 24, ஹரியானா- 14, தெலங்கானா- 4, கர்நாடகா- 10, உத்தரப்பிரதேசம்- 13, ராஜஸ்தான்- 4, லடாக்- 3, காஷ்மீர்- 2, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, பஞ்சாப் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT