Skip to main content

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு...

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ், இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

corona affected people increased in india

 

 

உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதேபோல உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், ஹைதராபாத்தில் ஒருவர், கர்நாடகாவில் ஏழு பேர் மற்றும் கேரளாவில் ஒன்பது பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் 11 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்